5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு உறுதி: அட்டவணை வெளியீடு

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தெரிந்ததே

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுத் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன

இந்த நிலையில் அரசு பொதுத் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி என்பது தெரியவந்துள்ளது

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கப்பட உள்ளதாகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது

Leave a Reply