shadow

ரஷ்ய-சீன எல்லையில் புதைக்கப்பட்ட 54 மனித கைகள்: திடுக்கிடும் தகவல்

ரஷ்யா-சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு பகுதி அருகே கட்டுமான பணி ஒன்றிருக்காக நேற்று பனிக்கட்டியை வெட்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையில் 54 வெட்டப்பட்ட மனித கைகள் இருந்துள்ளதை கண்ட கட்டுமான தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கைகள் அனைத்திலும் கைரேகை அழிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கைகள் யாருடையது, ஏன் வெட்டப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார் என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. அது எந்த காலத்தில் வெட்டப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது அந்த கைகளை சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருசில கைகளில் மட்டும் இருக்கும் கைரேகையை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply