50 ஆயிரம் பேர் திடீர் மாயம்: கும்பமேளாவில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகமெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில், அதிகமான கூட்ட நெரிசலால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் ஏராளமானார் தங்களுடைய உறவினர்களை காணாததால் கதறி அழுது கொண்டிருப்பதாகவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.