விபத்தில் 5 பேர் பலி, 11 பேர் படுகாயம்
மாம்பழம் ஏற்றுக் கொண்டு சென்ற லாரியில் மறைந்து சென்ற 18 தொழிலாளர்களில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 100 பேர் படுகாயம் அடைந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
மாம்பழத்தை ஏற்றிக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து ஆக்ரா சென்ற லாரி ஒன்றில் வெளிமாநில தொழிலாளர்கள் 18 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இவர்களில் 2 டிரைவர்கள் மட்டும் ஒரு கண்டக்டரும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த லாரி மத்திய பிரதேச மாநிலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாம்பழத்தின் இடையே உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்த 18 பேர்களில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர் மேலும் 11 பேர் படுகாயமடைந்து மத்திய பிரதேச மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது குறித்து மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்கள் விடப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.