5 வயது சிறுமியை மணந்த 55 வயது நபர். வரதட்சணை ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே.
ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை வரதட்சணையாக 5 வயது சிறுமியின் தந்தைக்கு கொடுத்துவிட்டு அந்த சிறுமியை 55 வயது நபர் ஒருவர் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையும், 55 வயது மணமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Gharibgol என்ற 5 வயது சிறுமியை அந்த சிறுமியின் தந்தையின் அனுமதியோடு 55 வயது நபர் ஒருவர் நேற்று முன் தினம் திருமணம் செய்தார். பெண்ணின் தந்தைக்கு மணமகன் ஆட்டுக்குட்டி, அரிசி, எண்ணெய் மற்றும் ஒருசில உணவுப்பொருட்களை மட்டுமே வரதட்சணையாக கொடுத்த இந்த திருமணத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த திருமணம் சிறுமியின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதால் இந்த புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸார் 55வயது மணமகனையும், சிறுமியின் தந்தையையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.