5 நாள் பரோலில் வெளியே வருகிறார் சசிகலா
பெங்களூர் சிறையில் கடந்த 233 நாட்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்க்க 5 நாட்கள் பரோலில் வெளியே வருகிறார்
இன்று மாலை பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வரும் அவர் விமானம் மூலம் சென்னை வரவுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்திற்கு இருந்து நேராக அவர் சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று இரவே அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் கணவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சசிகலா ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்றூம், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.