5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து: அதிரடி அறிவிப்பு

5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பொதுத்தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. இது குறித்து ஆலோசிக்கப்பட்டதன் பின் இதனை ரத்து செய்து பழைய தேர்வு முறையே நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply