shadow

திருவண்ணாமலை படிஅக்ரகாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை, சுமார் 175 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 61 மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதிய உணவாக மாணவர்கள் சத்துணவு மற்றும் முட்டையும் உட்கொண்டனர்.

சத்து மாத்திரை சாப்பிட்ட 19 மாணவர்கள் மற்றும் 24 மாணவிகள் என 43 பேருக்கு தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.