ஊரடங்கு உத்தரவை மீறி 4100 பேர் மீது வழக்குப்பதிவு: தமிழக போலீஸ் அதிரடி
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறியதாக 4100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் நேற்று முன்தினம், 1252 பேர் மீதும் நேற்று 2,848 பேர் மீதும் வழக்குப்பதிவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மிக மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ள நிலையில் எச்சரிக்கையை மீறி பலர் வெளியே வந்து கொண்டிருப்பதால் தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.