shadow

ஒலிம்பிக்கில் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலப் பதக்கம் பெற்று உள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5 கோல்கள் போட்டது. இதனை அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி அணி 4 கோல்கள் மட்டுமே போட்டதால் 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது

கடந்த 1980ஆம் ஆண்டு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை அடுத்து 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் பழக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது