shadow

405 ரன்கள் முன்னிலை: வெற்றியை நெருங்கியது இந்தியா

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளதால் வெற்றியை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விராத்கோஹ்லி 213 ரன்களும், புஜாரே 143 ரன்களும், முரளி விஜய் 128 ரன்களும், ரோஹித் சர்மா 102 ரன்களும் அடித்தனர்.

இந்த நிலையில் 405 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, ஆட்டநேர முடிவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. இன்றும், நாளையும் போட்டி இருக்கும் நிலையில் இன்னும் ஒன்பது விக்கெட்டுக்களை இந்தியா எடுத்துவிட்டால் இன்னிங்ஸ் வெற்றி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply