shadow

போர்ச்சுக்கல் நாட்டின் கடல் பகுதியில் 4000 சொகுசுக்கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் திடீரென தீ பிடித்ததால் அதில் இருந்த 4000 சொகுசு கார்கள் சாம்பலாகி உள்ளது.

போர்ச்சுகல் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் ஆடி கார் உள்ளிட்ட விலை உயர்ந்த 4000 சொகுசு கார்கள் இருந்தது.

இந்த நிலையில் அந்த கப்பலில் திடீரென தீப்பிடித்ததால் அந்த கார்கள் அனைத்தும் சாம்பலாகி உள்ளது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த கப்பலில் பணி புரிந்த 22 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர்.