40 தொகுதியிலும் போட்டி என கூறிய சரத்குமார், திடீரென அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடு என்று அறிவித்த அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் திடீரென தனது கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த சரத்குமார், தனது கட்சியின் ஆதரவை நேரில் தெரிவித்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
சரத்குமார் தனது திடீர் முடிவு குறித்து கூறியபோது, இந்த தேர்தலில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே அதிமுகவுக்கு ஆதரவு என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.