4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: பார்வர்ட் பிளாக்
திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது
இந்த நிலையில் இந்த 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு என பார்வர்ட் பிளாக் தெரிவித்துள்ளது. இக்கட்சியின் தலைவர் கதிரவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்தார்.
ஏற்கனவே திமுகவுக்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பார்வார்ட் பிளாக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.