4 தேமுதிக வேட்பாளர்கள் யார் யார்? பிரேமலதா பதில்

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியானவுடன் அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று கூறினார்.

தேமுதிகவுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply