38 எம்பிக்களை ராஜினாமா செய்ய தயாரா? முக ஸ்டாலினுக்கு அதிமுக தொண்டர்கள் பதிலடி
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர் பகுதியில் தேர்தல் பிரச்சார் மேற்கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலினுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளனர். திமுக எம்பிக்கள் 38 பேர்களும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயார் என்றால், நாங்களும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயார் என்று சவால் விடுத்துள்ளனர்.
இந்த சவாலை முக ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.