32 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் தங்கத்தின் விலை ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றும் விரைவில் தங்கத்தின் விலை ரூ.32 ஆயிரத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.32ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.32,096 என்பது குறிப்பிடத்தக்கது

தங்கத்தின் விலை ரூ.32 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியும் புதியதாக தங்கம் வாங்க இருப்பவர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Leave a Reply