shadow

சிவாஜி சிலை வைப்பதில் தகராறு: 30 போலீஸ்காரர்கள் காயம்!

மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த தகராறை விலக்கி வைக்க முயன்ற 30 போலீஸ்காரர்கள் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஜல்னா என்ற மாவட்டத்தில் சிவாஜி சிலை வைப்பதில் இடையே பிரச்சனை ஏற்பட்டது

இந்த பிரச்சினையை அடுத்து இரு பிரிவினரும் மோதிக்கொண்ட நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

இந்த நிலையில் இரு பிரிவினர் தாக்கிக் கொண்டதில் 30 போலீஸ்காரர்கள் காயம் அடைந்ததாகவும் இதுகுறித்து 300 பேர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன