120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்
தெலுங்கானா மாநிலத்தில் போச்சன்பள்ளி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாத 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கினற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டதாகவும், 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருக்கு போராடி வருவதாகவும் வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆழ்துளை கிணறு அருகே உள்ள தோட்டத்தில் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் போச்சன்பள்ளி கிராமத்திற்கு விரைந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.