shadow

ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு: நடிகையின் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

ஒரே ஒரு பேஸ்புக் பதிவு காரணமாக மூன்று வழக்குகளை நடிகை ஒருவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மராத்தி நடிகை கேடாகி சிட்டாலே என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்குமார் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார்

இதனை அடுத்து சரத்குமார் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்போது அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது

அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது