சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள்-போலீஸ் மோதல்: 3 பேர் கைது
சென்னையில் மாணவர்களுக்கும் போலீசார்களுக்கும் கடந்த சில மாதங்களாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் சட்டக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றபோது, போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதையில் வந்ததாகவும், மூன்று பேர் வந்ததாகவும் கூறி விசாரணை செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக உருவாகியுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், விசாரணை நடத்த வந்த காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், மாணவர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.