shadow
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்
 மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியாகினர். 
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து  3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகுமார் என்ற தொழிலாளி தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததை அடுத்து அவரை காப்பாற்ற சென்ற சரவணன் மற்றும் லட்சுமண் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.