shadow

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்த நிலையில் சுமார் 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

இந்த 10 நாட்களில் 15 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 26 கோடியே 60 லட்ச ரூபாய் காணிக்கை உண்டியல் மூலம் கிடைத்துள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவல் நேரத்திலும் பத்து நாட்களில் சுமார் 4 லட்சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.