அரசாணை கோரி மனுதாக்கல்
தமிழகத்தில் 3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பித்து வருவாய்த்துறை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுவதால் வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மனிதாபிமான அடைப்படையில் வீட்டு வாடகையை ஒருசில மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.