ரஜினியின் அதிரடி முடிவால் அதிர்ச்சி

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் மற்றும் சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகள் எம்.எல்.ஏக்கள் காலமாகிவிட்டதால் இந்த மூன்று தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் இடைத்தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

இந்த நிலையில் ஒருவேளை இடைத்தேர்தல் வந்தால் இந்த இடைத்தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிட திட்டமிட்டு இருப்பதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

பொதுத்தேர்தலுக்கு முன் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறக்கூடாது என்றும் அதனால் அக்கட்சியின் இமேஜை உடைக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply