3 தொகுதிகளில் வெற்றி: தினகரன் நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் தேனி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாம்

அதுபோக பதினைந்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் தினகரன் கட்சி இருக்கும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பதினைந்து தொகுதிகளிலும் வலுவான, வளமான வேட்பாளரை நிறுத்த தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் தினகரன் தரப்பு ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும்பட்சத்தில் தமிழக தேர்தல் களத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply