shadow

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை சாந்தினி குற்றம்சாட்டிய நிலையில் சாந்தினியும் அவரது கும்பலும் தன்னிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கமளித்துள்ளார்

தன்னுடன் எடுத்த புகைப்படங்கள் இருப்பதாகவும் தனக்கு மூன்று கோடி ரூபாய் கொடுத்தால் அதை வெளியே சொல்ல மாட்டேன் என்றும் சாந்தினி மிரட்டினார் என்றும் ஆனால் அவரது மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன் என்றும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சாந்தினி யார் என்றே தனக்கு தெரியாது என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளார்