3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பிக்களுடன் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தினகரன்
அதிமுகவின் ஒரு அணியின் தலைவராக இருக்கும் டிடிவி தினகரன் கைவசம் 21 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அந்த எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். ஆனால் இது உட்கட்சி விவகாரம் என்று கவர்னர் ஒதுங்கிவிட்டார்.
இந்த நிலையில் இன்று தினகரனுக்கு கவர்னரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சற்றுமுன் அவர் கவர்னரை சந்திக்க புறப்பட்டுள்ளார். அவருடன் 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 எம்.பிக்களுடன் சென்றுள்ளனர்.
இன்றைய கவர்னர் சந்திப்பின்போது ஆட்சிக்கு வாபஸ் என்று தினகரன் அறிவிப்பாரா? அல்லது முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற பழைய பல்லவியை பாடுவாரா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்
Leave a Reply
You must be logged in to post a comment.