3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து!
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வனை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபால் அவர்களிடம் பரிந்துரை செய்துள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அதிமுக நலன் கருதியே 3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக கருதுகிறேன் என்றும், சபாநாயகர் மேற்கொள்ளும் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.