3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமா?
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வனை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபால் அவர்களிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனால் இவர்கள் மூவரின் பதவி பறிபோகும் ஆபத்து உள்ளது
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க விவகாரம் தற்போதுதான் முடிவுக்கு வந்து அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில் மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மேலும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
22 தொகுதி இடைத்தேர்தலால் ஆட்சி மாறும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் மூன்று எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.