shadow

3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி: இன்று ஏலம்

கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் போல் பேட்மிண்டன் விளையாட்டின் பிரிமியர் லீக் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் 3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி வரும் டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஸ்மாஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான வீரர்கள், வீராங்கனைகளின் ஏலம் ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஏலத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் ஏலம் விடப்படவுள்ளனர். இவர்களில் 82 பேர் இந்திய வீரர், வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 2-ம் நிலை வீரர் சன் வான் ஹோ (தென்கொரியா), இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனத்தைபே), ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), இந்திய நட்சத்திர மங்கைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு ஏலத்தில் கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply