சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம். நெரிசலில் சிக்கி 29 பேர் படுகாயம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத பக்தர்கள் ஒரே நாளில் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மட்டும் சுமார் 5லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய கோவிலில் குவிந்தனர். தற்போது சீசன் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால்,அய்யப்ப சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். வரும் ஜோதி தினம் வரை இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.