அதிர்ச்சி தகவல்

கொரோனாவுக்கு சற்றுமுன் சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியால் சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய கொரோனா பரிசோதனையின் முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் ஒருவரும் மரணம் அடைந்தார்.

Leave a Reply