அமெரிக்காவின் அடுத்த அதிரடி
24 சீன நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த 24 சீன நிறுவனங்களும் தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் பங்கெடுத்ததற்காக இந்த தடை என கூறப்படுகிறது
அமெரிக்கா தடை விதித்துள்ள தடை விதிக்கப்பட்ட 24 அரசு நிறுவனங்களில் கட்டுமான நிறுவனமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கோ நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் சீனா கப்பல் கட்டும் குழுவின் ஒரு பிரிவு ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை காரணமாக தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் அமெரிக்காவிற்கு வருகை தர விசா பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.