டெல்லியில் ஒரே நாளில் 23 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித்தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதுவும் முறையாக பின்பற்றப்படுகிறது இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் புதிதாக ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் ஒருசில அதிரடி நடவடிக்கைகளை இன்று முதல் எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply