224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 153 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் 224 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா மிக அபாரமாக பேட்டிங் செய்து 162 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.