223 கிலோ தங்கம், ரூ.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ள பறக்கும் படை

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை கடந்த சில நாட்களாக நடத்திய வாகன சோதனையில் இதுவரை ரூ.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவரை வாகனச் சோதனையில் 223 கிலோ தங்கமும், 346 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மீது இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Leave a Reply