22 ஆண்டுகளுக்கு பின் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்
கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் முதல்முறையாக ஏழு குழந்தைகள் பிறந்த நிலையில் சரியாக 22 ஆண்டுகள் கழித்து தற்போது 25 வயது இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் இவர் தற்போது 10 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
ஈராக் நாட்டில் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகும். ஏழு குழந்தைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் உள்ளூர்
பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
ஏழு குழந்தைகளையும் சுகப்பிரசவத்தில் பெற்ற இளம்பெண் கூறியபோது, ‘இனிமேல் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், பத்து குழந்தைகளையும் நல்லபடியாக வளர்த்து பெரிய ஆளாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.