20 வருடங்களுக்கு பெண் ஐஏஎஸ் மீது காதல்: வெளியுறவுத்துறை அதிகாரியின் மட்டமான செயல்

20 வருடங்களுக்கு முன் காதலித்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியை பழிவாங்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் செய்த மட்டமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் அதிகாரி பயிற்சியின்போது ரஞ்சன் பிரதாப்சிங் என்பவர் ஐஏஎஸ் பயிற்சி பெற வந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார் ஆனால் அந்தப் பெண் அவரிடம் நட்பாகவே பழகி வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் நண்பர்களாகவே சகஜமாக பழகி வந்தனர்

இந்த இருவரும் பயிற்சி முடிந்து வெவ்வேறு இடங்களில் பணி புரிந்த நிலையில் கடந்த பல வருடங்களாக நட்புடன் பேசி வந்தனர். ஆனால் சில நாட்களாக அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, பிரதாப் சிங்கிடம் பேசவில்லை போல் தெரிகிறது
இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவரின் காரில் போதைப்பொருளை ஒளித்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்

போலீசார் உடனடியாக பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவரின் காரின் சோதனை செய்தபோது போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது

இருப்பினும் அந்த போதைப் பொருளை வைத்தது வேறொருவராக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்தபோது தற்போது வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் ரஞ்சன் பிரதாப் சிங் தான் அதை வைத்தது என்பதை ஆதாரபூர்வமாக போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து ரஞ்சனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்காக தற்போது உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் மட்டமான செயலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply