shadow

20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி

தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகள் இடைத்தேர்தல் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியிருக்கும் நிலையில் இந்த 20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் இந்த ஆட்சி மாறும் என்று கூறிய கனிமொழி எம்பி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதுபோல அதிமுக அரசு மக்களுக்கான எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுவதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply