shadow

திருச்சி தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகரில் வசித்து வரும் தம்பதி சேகர் – மகாலட்சுமி ,2 வயதில் சாய் தருண் என்ற மகன் உள்ளான்.

நேற்று திடீரென மயங்கி விழுந்து சிறுவனை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மகாலட்சுமி தருணுக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். பின் அதே நூடுல்ஸை தருணுக்கு மறுநாள் காலை உணவாக கொடுத்துள்ளார்.

ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை கொடுத்ததால் சிறுவன் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.