shadow

2 சிறுமிகள் பலியான கொடுங்கையூரில் மீண்டும் மின்கசிவு: அலட்சியம் தொடர்ந்தால் ஆபத்து

நேற்று காலை மழைநீரில் விளையாடி கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் தவறுதலாக அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியாகினர். இந்த சோகத்தின் அதிர்ச்சியே இன்னும் மீளாத நிலையில் அதே பகுதியில் மீண்டும் மின்கசிவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து எட்டு மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின்கசிவை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வரூகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியம் தொடர்ந்தால் மீண்டும் உயிர்கள் பலியாகும் ஆபத்து இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசும், மின்வாரியத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply