2வது மனைவிக்கு 2 கள்ளக்காதலர்களா? முதலிரவுக்கு மறுநாளே கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனைவி மரணமடைந்ததால் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார் 37 வயது நபர் ஒருவர். அவருக்கு உறவினர்கள் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்

இந்த நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தபோது தன்னுடைய புது மனைவிக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வந்ததை கவனித்தார். இருப்பினும் தோழிகள் யாராவது திருமண வாழ்த்து சொல்ல அழைப்பு விடுத்து இருப்பார்கள் என்று அதை அவர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்

இந்த நிலையில் முதலிரவு முடிந்த பின்னரும் நள்ளிரவில் தொடர்ச்சியாக செல்போனில் அழைப்பு வந்ததும் புதுப்பெண் அதனை எடுத்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து கணவருக்கு சந்தேகம் வந்தது

இதனையடுத்து மனைவி தூங்கிய பின் அவரது செல்போனை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் இரண்டு இளைஞர்கள் தொடர்ச்சியாக செல்போனில் அழைப்பு விடுத்தது தெரியவந்தது. அதுமட்டுமன்றி வாட்ஸ்அப் மெசேஜ்களைச் சோதனை செய்தபோது அவர்கள் இருவருமே தனது மனைவியின் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த கணவர் மறுநாளே தனது மனைவியை அவரது தாயார் வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் இது குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply