இருப்பினும் பாகிஸ்தான் வீரர் ’மேன் ஆஃப் த மேட்ச்’
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி நேற்று முடிவுக்கு வந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்தது
மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முடியாததால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 72 ரன்களும், அபித் அலி 60 ரன்களும் எடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தின் கிராலே 53 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானின் முகம்து ரிஸ்வான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்
Leave a Reply
You must be logged in to post a comment.