shadow

இரண்டாம் தவணை தொகை ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை ஜூன் 26ம் தேதிக்குள் விநியோகிக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த 15ம் தேதி முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாவது தவணை ரூபாய் 2000 அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் 2000 பணம் மற்றும் மளிகை பொருட்களை வரும் 26-ம் தேதிக்குள் வழங்கி முடிக்க உணவு வழங்கல் துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது