shadow

1953 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ் குரூப்-2ஏ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணியாளர்களின் காலிப்பணிடங்களை கண்டறிந்து அந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்கும் அமைப்பு ஆகும். நேர்முக தேர்வு அல்லாத குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பில் 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

காலிபணியிடங்களின் எண்ணிக்கை : 1953

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் ( www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in )

விண்ணப்ப்பிக்க வேண்டும் கடைசி தேதி : 26.05.2017

தேர்வு நடைபெறும் நாள் : 06.08.2017

தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை : //www.tnpsc.gov.in/notifications/2017_10_not_eng_ccs_ii_g2a_non_ot.pdf

Leave a Reply