தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏக்கள். எடப்பாடி ஆட்சி அவ்வளவுதானா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்து கட்சியின் பெயரையும் ,சின்னத்தையும் இழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு அணியாக தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகியிருப்பதால் அதிமுக சின்னாபின்னாமாகி சிதறுதேங்காயாக மாறிவிட்டதாக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்
சமீபத்தில் திகார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை வந்த தினகரன், கட்சியும் ஆட்சியும் தனது குடும்பத்தினர்களின் கையை விட்டு போய்விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக தற்போது அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் அணியின் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணி அதிர்ச்சியில் உள்ளது.
இப்போதைக்கு தினகரன் அணியில் பெரம்பூர் எம்எல்ஏ., வெற்றிவேல், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் பரமக்குடி எம்எல்ஏ முத்தையா, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் ஆகியோர் இருப்பதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் தினகரன் பக்கம் சாயும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.