18 வருடங்களில் ஒரு காட்டையே உருவாக்கிய பிரேசில் தம்பதிகள்
மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், இருக்கும் மரங்களை காக்க வேண்டிய அவசியத்தையும் இன்னும் பலர் புரிந்து கொள்ளாமல் உள்ளனர்.
மரங்களால் மழை பெய்வது மட்டுமின்று நாம் மூச்சுவிடக்கூடிய ஆக்சிஜனையும் மரங்கள் தான் தருகின்றன. மரங்கள் இல்லாமல் போனால் நம் எதிர்கால தலைமுறைகள் தண்ணீரை போல் ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்
இந்த நிலையில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிகள் முழுநேரமாக மரம் வளர்ப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த 2001ஆம் ஆண்டு பொட்டைக்காடாக இருந்த நிலத்தை தற்போது அடர்ந்த மரங்கள் உள்ள காடாக மாற்றியுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு சபாஷ் போடுவோம்
Leave a Reply
You must be logged in to post a comment.