18 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்த சதி: தினகரன் பகீர் தகவல்
தொடர்ச்சியாக ஐடி ரெய்டு நடத்துவதன் மூலம் 18 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை நிறுத்த சதி செய்யப்படுவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் பகீர் தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறையை 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது’ என்று கூறினார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை காரணம் காட்டி தான் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட்டபோது தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.