shadow

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: 3வது நீதிபதி தீர்ப்பு

அதிமுகவில் இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியது

இந்த தீர்ப்பின்படி 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த பிறப்பித்த செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த தீர்ப்பால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இந்த தீர்ப்பை 18 எம்.எல்.ஏக்கள் ஏற்றுக்கொண்டால் விரைவில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply